வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மூவாயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் மிக குறைந்தளவானோரே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருணஜயசேகர தெரிவித்துள்ளார்.
திருகோணமலை மாவட்டத்திலேயே டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை டெங்கு ஒழிப்பு பணியகத்தின் கள ஆய்வு நடவடிக்கைகள் நாளாந்தம் முன்னெடுக்கப்படுவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் அருணஜயசேகர மேலும் தெரிவித்துள்ளார்.