சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் மனிதர்களிடையே பரவுவது உறுதிசெய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்கத்தால் ஆசியாவில் இதுவரை 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் மாத்திரம் 217 பேருக்கு நோய் பரவியுள்ளது. குறித்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நோயால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகளவானோர் சீனாவில் அசைவ உணவு விற்பனை சந்தையில் பணியாற்றியவர்களென தெரியவந்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து குறித்த வைரஸ் பரவியிருக்கலாமென சீன அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
தாய்லாந்து, ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகளிலும் வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ளமை உறுதிசெய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் வைரஸ் தாக்கத்திலிருந்து, தம்மை பாதுகாத்துக்கொள்ளும் முயற்சியில் உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. தமது நாடுகளுக்கு வருகைத்தரும் வெளிநாட்டு பயணிகளை பரிசோதனை செய்யும் நடவடிக்கைகளும் பல்வேறு நாடுகளிலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.