மட்டக்களப்பு – கல்முனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். மட்டக்களப்பு நோக்கி பயணித்த கார் ஒன்று அதேதிசையில் பயணித்த மோட்டார் சைக்கிளொன்றுடன் சிக்குண்டு அதிக தூரம் இழுத்துசெல்லப்பட்டுள்ளது. சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினரும் அவர்களது இரண்டு வயது குழந்தை மற்றும் காரின் சாரதி ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் கல்லடி சிவானந்தா விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக விபத்து இடம்பெற்றுள்ளது. காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.