பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தமது அரச குடும்பத்திற்கான பட்டங்களை தொடர்ந்தும் பயன்படுத்த மாட்டார்களென பெக்கிம்ஹேம் மாளிகை அறிவித்துள்ளது. அத்துடன் அரச குடும்ப பணிகளுக்காக அவர்கள் நிதி சேகரிக்கும் செயற்பாட்டிலும் ஈடுபட மாட்டார்களென குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இனிவரும் காலங்களில் எந்தவொரு அரச குடும்ப விழாக்களிலும் இளவரசர் ஹரி மற்றும் மேகன் கலந்துகொள்ள மாட்டார்களென பெக்கிங்ஹேம் மாளிகை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் இளவரசர் ஹரி தங்கியிருந்த மாளிகைக்கான வரி கட்டணத்தையும் மீள செலுத்த தீர்மானித்துள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அரச குடும்ப பொறுப்புக்களிலிருந்து விலகுவதாக அண்மையில் அவர்கள் அறிவித்தனர். இதனையடுத்து பிரித்தானிய அரச குடும்பம் குறித்த தீர்மானங்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.