யெமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலில் 60 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள்; சவூதி ஆதரவுப்படையை சேர்ந்தவர்களென சர்வதேச செய்திகள் தெரிவிக்கன்றன. சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிர் இராச்சியம் உள்ளிட்ட பல நாடுகளின் இராணுவ குழுக்கள் முகாமிட்டுள்ள பகுதியிலேயே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் மேலும் பலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக யெமன் பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.