காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில், 29 பேர் கைதுசெய்யப்பட்டனர். பொலிசாரால் தேடப்பட்டுவந்த 5 சந்தேக நபர்களும் , கஞ்சா மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் 4 சந்தேக நபர்களும், சட்டவிரோதமாக வாகனம் செலுத்திய 20 பேரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயனசிறி தலைமையிலான 26 பேரைக் கொண்ட குழுவினர், சுமார் 6 மணித்தியாலம் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டகளப்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். அவர்களிடம் காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.