எந்தவொரு மாணவரும் திறமையற்றவர் இல்லையென கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். மாணவர்களின் திறமைகளை இனங்காணும் விதத்தில் கல்வித்துறை அமையவேண்டுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களை சித்தியடைந்தவர்கள், சித்தியடையாதவர்கள் என பிரிப்பது மிகவும் மோசமான பிரிவினையாகும். சித்தியடையாத மாணவர்கள் என எவ்வாறு கணிக்க முடியும். சித்தியடையாதவர்கள் என்ற சுட்டியை உருவாக்கியவர்கள் யாரென அமைச்சர் கேள்வியெழுப்பினார்.
மாணவர்கள் சித்தியடையாதவர்கள் அல்ல. அவர்கள் ஏதேனும் ஒரு துறையில் திறமையை கொண்டிருப்பர். அந்த திறமையை கண்டுபிடிக்க வேண்டும். பெற்றோரும், ஆசிரியரும் மாணவர்களின் திறமைகளை இனங்காண்பதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.