இலங்கை பெற்றோலிய வள கூட்டுத்தாபனத்தின் ஊடாக மின்சார சபைக்கு வழங்கப்படும் எரிபொருள் எல்லையை அதிகரிக்குமாறு கேரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் எரிபொருள் எல்லை, அதிகரிப்பட்டிருந்தால் மாற்று நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கூட்டுத்தாபனத்தின் உயர் முகாமைத்துவம் அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
தேசிய தேவையை கருத்திற்கொண்டு எரிபொருள் விநியோக எல்லையை 90 மில்லியன் ரூபா வரை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதியை பெற்றுத்தருமாறு அவர்கள் கோரியுள்ளனர். அதுதொடர்பில் அமைச்சரவையை தெளிவுபடுத்தி முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
மின்சார சபையின் ஊடாக பெற்றோலிய வளகூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ள 84 பில்லியன் ரூபா நிலுவை தொகையை மின்சார சபையின் வருமானத்திற்கமைய செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் சுட்டிக்காட்டினார். கடந்த 5 வருடங்களில் நாட்டின் மொத்த மின்சார தேவை முன்னர் காணப்பட்டதைவிட நூற்றுக்கு 27 ஆக அதிகரித்துள்ளது. எனினும் மின் உற்பத்தியை அதிகரிக்க புதிய மின்சார திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படாமையினால் மின்சார சபைக்கு நட்டம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.