அமெரிக்க – ஈரான் மோதல் தொடர்பில் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இரண்டு மணித்தியால விவாதம் இடம்பெற்றுள்ளது. இரு தரப்பிற்கும் ஆதரவான கருத்துக்கள் இங்கு வெளியிடப்பட்டுள்ளன. தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டுமென சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எவ்வாறெனினும் அமெரிக்காவின் செயற்பாடு இங்கு விமர்சிக்கப்பட்டுள்ளன.
உலக வல்லரசுகளுடன் கடந்த 2015 ம் ஆண்டு அணுவாயுத வேலைத்திட்டம் தொடர்பில் ஈரான் உடன்படிக்கொன்றில் கைச்சாத்திட்டது. எனினும் அதிலிருந்து ஒருதலைபட்சமாக அமெரிக்கா விலகியது. இதனால் குறித்த ஒப்பந்தத்தை மேலும் அதிகாரமிக்கதாக்க அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென ஐரோப்பிய பாராளுமன்றத்தில் சுட்டிக்காட்டப்பட்டது.
இதேவேளை உக்ரைன் விமானம் மீது ஈரான் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதல் தொடர்பான புதிய காணொளியொன்றும் வெளியாகியுள்ளது. குறித்த தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.