ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின், கினிகத்தேனை, தியகல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். ஹட்டனிலிருந்து, கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியொன்றும், கண்டியிலிருந்து, ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பஸ் வண்டியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்த சிறுவர்கள் உட்பட 23 பேரும் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6 பேரை மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தியகல வீதியில் மண்சரிவு ஏற்பட்ட பகுதியில் புனரமைப்புபணிகள் இடம்பெறுகின்றமையால், குறித்த வீதியூடான போக்குவரத்து ஒரு மருங்குக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த வீதியூடாக பயணித்த பஸ் வண்டிகளே இவ்வாறு நேருக்கு, நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்துடன் தொடர்புடைய பஸ் வண்டிகளின் சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.