லயன் எயார் விமானமொன்று, 285 பயணிகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. சவூதி – ஜெட்டாவிலிருந்து, இந்தோனேசிய சுரபயா விமான நிலையம் நோக்கி பயணித்த ஏ- 330 ரக விமானமே இவ்வாறு கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விமானத்தில் பயணித்த இருவர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் உயிரிழந்தனர். அவர்களின் சடலம் இலங்கை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 74 வயதான பெண்ணொருவரும், 64 வயதான ஆணொருவருமே உயிரிழந்தவர்களென தெரியவந்துள்ளது. இருவரும் இந்தோனேசிய பிரஜைகளென கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.