கொழும்பின் சில பகுதிகளுக்கு 24 மணித்தியால நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
இன்று காலை 08.00 மணிமுதல், நாளை காலை 08.00 மணிவரை நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படும். அதற்கமைய பேலியகொட, வத்தளை – மாபொல பிரதேசங்களுக்கு நீர்விநியோகம் தடைப்படவுள்ளது. அதற்கு மேலதிகமாக களனி பிரதேச சபைக்குட்பட்ட ஹெந்தலை, எலகந்த மற்றும் பள்ளியவத்தை ஆகிய பிரதேசங்களுக்கும் நீர்விநியோகம் தடைப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.
பியகம பிரதேச சபைக்குட்பட்ட மங்குருவில வீதி, விஜேராம மாவத்தை உள்ளிட்ட பகுதிகளுக்கும் நீர்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.