போதைப்பொருளுடன் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகை தந்த 150 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். அவர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களில் 110 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து தண்டப்பணம் விதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 40 பேருக்கு எதிராக எதிர்வரும் 21ம் திகதி சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதேவேளை இதுதொடர்பான சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமென பொலிசார் தெரிவித்துள்ளனர்.