மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் கடந்த டிசம்பர் 27 ஆந் திகதி தொடக்கம்; 2020 ஜனவரி 03 ஆம் திகதி வரையும் 216 பேர் டெங்குநோய் தாக்கத்திற்குள்ளாகியுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 2019ம் ஆண்டு டிசம்பர் 27 ஆம் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 03 ஆம் திகதி வரை 216 பேர் டெங்குத் தொற்றுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வீடு சென்றுள்ளனர்.
இந்தவாரம் டெங்குதாக்கத்தினால் அதிகமாக பாதிப்புக்குள்ளான மட்டக்களப்பு பிரிவில் இதுவரை 32 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேபோன்று ஆரையம்பதியில் 39 பேர், களுவாஞ்சிகுடியில் 36 பேர், வாழைச்சேனையில் 30 பேர், செங்கலடியில்; 16 பேர், காத்தான்குடியில் 15 பேர், ஏறாவூர் 12 பேர் , வெல்லாவெளி 10 பேர், வவுணதீவு 08 பேர் , பட்டிப்பளை 07 பேர், ஓட்டமாவடி 05 பேர், கோரளைப்பற்று மத்தி 03 ,வாகரை 02 பேர், கிரான் 01 பேர் இவ்வாறு இனங்காணப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பாக களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் ஒரு மரணம் பதிவாகியுள்ளதாக வைத்தியர் வே.குணராஜசேகரம் தெரிவித்தார். மொத்தமாக கடந்தவாரம் 216 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மட்டக்களப்பு மக்கள் சற்று விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கி கிடக்கின்ற குப்பைகள் நீர்தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பெருகுவதற்கு இடம் கொடுக்காத வகையில் துப்பரவாக வைத்து கொள்ளுமாறு மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாடு பிரிவிற்கு பொறுப்பான வைத்தியர் கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.