பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். உஹன – லாதுகல வனப்பகுதியில் வெட்டப்பட்டு கைவிடப்பட்டிருந்த மரங்களை ட்ரெக்டர் வண்டியில் கொண்டு எடுத்துச் சென்ற பொலிசார் மீது முச்சக்கர வண்டியில் வந்த சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக உஹன பொலிசார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் காயமடைந்துள்ளார். இந்நிலையில் தாக்குதலுடன் தொடர்புடையதாக கைதான சந்தேக நபர்கள் நால்வரையும் அம்பாறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உஹன பொலிசார் தெரிவித்துள்ளனர்.