பஸ் வண்டிகளில் அதிக சத்தத்துடன் பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்துவதற்கு எதிர்வரும் 15ம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். எதிர்வரும் 15ம் திகதிக்கு பின்னர் அதிக சத்தத்ததுடன் பாடல்களை பஸ்களில் ஒலிபரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ் வண்டிகளில் ஒலிபரப்புவதற்கென மெல்லிசை பாடல்கள் அடங்கிய இருவெட்டுக்களை வழங்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.