வென்னப்புவ பகுதியில் கடலுக்கு நீராடச் சென்ற 3 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 17 முதல் 21 வயதிற்கிடைப்பட்ட இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்றைய தினம் சம்பவம் இடம்பெற்றுள்ளது. வென்னப்புவ கம்மலவெல பகுதியிலுள்ள கடலுக்கு இளைஞர்கள் நீராடச் சென்றுள்ளனர். இந்நிலையில் இளைஞர்களின் சடலங்களை மீட்கும் பணியில் கடற்படையினரும் பொலிசாரும் ஈடுபட்டனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வென்னப்புவ பொலிசார் மேற்கொண்டுள்ளனர்.