அமெரிக்க மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் சமாதான பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார். அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையில் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பில் நீண்டகால மோதல் நிலவிவருகிறது. ஈரானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகின்றார்.
அண்மையில் ஈரான் இராணுவ தளபதி காசிம் சுலைமானி அமெரிக்க குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டதையடுத்து, நிலைமை உக்கிரமடைந்தது. ஈரானும் பதில் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. இந்நிலையிலேயே இரு நாடுகளும் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, சுயகட்டுப்பாட்டுடன் செயற்பட வேண்டுமெனவும், சர்வதேச சட்டத்தை மதிக்க வேண்டுமெனவும், போப் பிரான்சிஸ் அறிவுறுத்தியுள்ளார்.