தனமல்வில சமாதிகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.தனமல்வில சூரியஆர குமாரகம பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை குறித்த சடலம் பாழடைந்த இடமொன்றில் இருந்து இன்று காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. தலைக்கு துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தனமல்வில பொலிசார் தெரிவிக்கின்றனர்.