போர்ட் சிட்டி வேலைத்திட்டத்தின் ஊடாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்பட்ட கொழும்பு மோதர பிரதேச நான்கு மீனவர் சங்கங்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நிதியுதவி வழங்கப்பட்டது.
ஒரு மீனவ சங்கத்திற்கு 17 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வீதம் 70 இலட்சம் ரூபா இவ்வாறு அமைச்சரினால் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கு முன்னர் நீர்கொழும்பு பிரதேசத்தில் மீனவ சங்கங்களுக்கு 1500 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்கப்பட்டது. இருந்தாலும் கொழும்பு மாவட்டத்தில் உள்ள மீனவ சங்கங்களுக்காக நிதியுதவி வழங்கப்பட்டிருக்கவில்லை. இது தொடர்பில் இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு இதுதொடர்பில் தெளிவுப்படுத்தியமையடுத்து இவ்வாறு நிதியுதவி வழங்கப்பட்டது. குறித்த மீனவ குடும்பங்களுக்கு சுயத்தொழிலுக்காக நிவாரண வட்டி அடிப்படையில் இந்த நிதியுதவி வழங்கப்பட்டது. இதன்மூலம் அவர்களது அன்றாட வாழ்க்கை திட்டங்களை முன்னேற்றிக்கொள்ளுமாறு அமைச்சர் இதன்போது மீனவ சங்கங்களிடம் கேட்டுக்கொண்டார்.