நெற்பயிர்ச்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு இலவசமாக உரம் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இவ்வருடம் இடம்பெறவுள்ள சிறும் போகத்தில் திட்டம் ஆரம்பிக்கப்படும். அதிகபட்சமாக இரண்டு ஹெக்டேயர் வரையான நிலப்பரப்பிற்கு யுரியா உள்ளிட்ட 3 வகையான உர வகைகளை பரிந்துரைக்கப்பட்ட அளவுகளில் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சகல கிராம சேவை பிரிவுகளிலுமுள்ள வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கென தலா ஒரு வீட்டை நிர்மாணிக்கும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.