அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள பாரி காட்டு தீ தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிஸனுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி தனது கவலையை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவுஸ்திரேலியா எதிர்கொண்டுள்ள காட்;டு தீ அனர்த்தம் குறித்து தனது கவலையை வெளியிட்டுள்ளார். இக்காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவில் காட்;டு தீ பரவுவது பொதுவான விடயமாக இருந்தபோதிலும் இம்முறை அது முன் ஒருபோதும் இல்லாத வகையில் மிக மோசமான அழிவுகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்க 30 அவுஸ்திரேலிய பிரஜைகள் இதற்கு இரையாகியுள்ளதுடன், சுமார் 50 இலட்சம் விலங்குகளும் உயிரிழந்துள்ளன. அவுஸ்திரேலிய பிரதமடர் ஸ்கொட் மொரிசனுடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலில் அந்நாட்டில் உறவுகளை இழந்தவர்களின் கும்பத்தினருக்கும் ஜனாதிபதி தனது அனுபதாபத்தை தெரிவித்து கொண்டார். சுனாமி மற்றும் இடையிடையே ஏற்படும் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்படும் நாடு என்ற வகையில் இலங்கை மக்கள் அவுஸ்திரேலிய மக்களின் கவலையை புரிந்துக்கொண்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தில் அவுஸ்திரேலிய மக்களுக்கு இலங்கை மக்கள் ஒருதொகுதி தேயிலையை அன்பளிப்புச் செய்யவிருப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.