முன்னாள் பிரதி அமைச்சர்களுள் ஒருவரான சரண குணவர்தனவுக்கு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றம் 3 வரட கால சிறை தண்டனை விதித்துள்ளது. அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயல்பட்ட காலத்தில் அரசாங்கத்திற்கு நட்டம் விளைவித்ததாக தாக்கல் செய்யப்பட்ட குற்றச்சாட்டு பேரில் குற்றவாளியாக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக செயல்பட்ட சரண குணவர்தன 3 வாகனங்களை கொள்வனவு செய்து அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தி லஞ்ச ஊழல் ஆணைக்குழு இவ்வழக்கை தாக்கல் செய்திருந்தது. நீண்ட வழக்கு விசாரணையை தொடர்ந்து தீர்ப்பு வழங்கிய கொழும்பு பிரதம மஜிஸ்திரேட் லங்கா ஜயரத்ன சிறை தண்டனைக்கு மேலதிகமாக 3 இலட்சம் ரூபா அபராதமும் விதித்தார்.