5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீள்பரிசீலனை பெறுபேறுகளை நாளை அல்லது நாளை மறுதினம் வெளியிடவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீள் பரிசீலிப்பு பணிகள் தற்போத நிறைவடைந்துள்ளன.
இதேவேளை கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை விடைத்தாள் திருத்தப்பணிகள் இடம்பெற்ற 47 பாடசாலைகளின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாகவுள்ளன. 84 பாடசாலைகளில் விடைத்தாள் திருத்தப்பணிகள் இடம்பெற்றன. அதில் 37 பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமானமை குறிப்பிடத்தக்கது.