நிலக்கரி சுரங்கத்தை நிர்மாணிப்பதற்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாக அதிமேற்றானியார் அதி வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இதனை நிர்மாணிப்பதன் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றை தொடர்ந்து கருத்து தெரிவித்தார்.
“நிலக்கரி சுரங்கத்தை திறப்பதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்கின்றோம். உலகின் பல நாடுகள் இதனை தடை செய்துள்ளன. இதன்மூலம் சூழல் மாசமடைவது மாத்திரமன்றி மனிதரது உயிருக்கும் பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றது. இது உறுதிப்படுத்தப்பட்டும் உள்ளது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இயந்திரங்கள் மூலம் தூசிகளும் கழிவுகளும் வெளியேற்றப்படுவது இல்லையென அவர்கள் கூறிய போதிலும், அதன் செயற்பாடுகள் பல தடவைகள் செயல் இழந்தன. அப்பகுதியில் உள்ள மீனவர்களிடமும் விவசாயிகளிடமும் இதன்மூலம் ஏற்பட்ட பாதிப்புக்கள் என்னவென்பது குறித்து கேட்க வேண்டும். அவர்கள் சொல்லுவார்கள். “
[ot-video type=”youtube” url=”https://youtu.be/ZlF8mW2KCgg”]