பஸ்யால வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கனரக வாகனமொன்றில் மோதுண்டு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். குறித்த வீதியில் விபத்தில் சிக்குண்டிருந்த பெண்ணொருவரை காப்பாற்ற சென்ற நிலையில், அவர் விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.