யாழ்ப்பாணம் – பொன்னாலை முச்சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். ட்ரக்டர் வண்டியொன்று குடை சாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இருவரின் நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். ட்ரக்டர் அதிகவேகத்தில் பயணித்த நிலையில் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிவந்துள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.