8வது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கூட்டத்தொடர் இடம்பெறும். அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலினூடாக கடந்த 2ம் திகதி பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.
இந்நிலையில் எதிர்வரும் 3ம் திகதி பாராளுமன்ற அமர்வின் போது ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை விளக்கங்களை முன்வைக்கவுள்ளார்.