சூடானில் பாதுகாப்பு படை வீரர்கள் 27 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த ஆசிரியர் ஒருவர் கொலைசெய்யப்பட்டமை தொடர்பில் குறித்த 27 பேருக்கும் எதிராக விசாரணைகள் இடம்பெற்று வந்தன. அவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதையடுத்து நீதவான் மரணதண்டனை விதித்து தீர்;ப்பளித்துள்ளார்.