ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதி கொண்ட ஹெரோயின் தொகை வவுனியா பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பஸ்ஸொன்றை செட்டிக்குளம் பொலிஸ் வீதித்தடைக்கு அருகில் பரிசோதனைக்கு உட்படுத்திய போதே இவை கண்டுபிடிக்கப்பட்டன.
பஸ் வண்டிக்குள் பையொன்றில் மறைத்த நிலையில் குறித்த ஹெரோயின் தொகை மீட்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சம்பவத்தில் கிளிநொச்சி பூநகரி பகுதியை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மன்னார் உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு போதைப்பொருள் பகிர்ந்தளிப்பவரென தெரியவந்துள்ளது. சந்தேகநபரையும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.