சீனாவில் பாலியல் குற்றத்தில் ஈடுபடுகின்றவர்களுக்கு வழங்கப்படும் தண்டனை முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. பாலியல் தொழிலில் ஈடுபடுகிற பெண்கள் கைதுசெய்யடுகின்றபோது 2 ஆண்டுகள் காவல் மையங்களில் வைக்கப்பட்டனர். அதன்போது அவர்கள் பொம்மைகள், வீட்டு வசதி சாதனங்கள் செய்கிற பணியில் கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். குறித்த தண்டனை முறையை சீனா முடிவுக்கு கொண்டுவர தீர்மானித்துள்ளது.
இதற்கமைய தற்போது காவலில் வைக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் விடுவிக்கப்படவுள்ளதாக சீனா தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் பாலியல் தொழில் ஈடுபடுகின்றவர்கள் 15 நாள் காவலில் வைக்கப்படுவதுடன் ஐய்யாயிரம் யென் அபராதம் விதிக்கப்படுமென சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை நடைமுறையிலிருந்த தண்டனை சிறந்த சமூக சூழ்நிலையையும், பொது ஒழுங்கையும் பராமரிக்க உதவியதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை தற்போதய சூழலுக்கு குறித்த முறை பொருத்தமற்றதாக கருதப்படுவதாக சீன தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.