ஏரியொன்றில் நீராடச்சென்ற தாயும், மகனும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். குருநாகல் பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொதுஹெர – மஹபிட்டிய கஹகமுவ ஏரியில் நீராடச்சென்றவர்களே அனர்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர். 44 வயதான தாயும், 15 வயதான மகனும் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்;. சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.