வவுனியாவில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர். இன்று அதிகாலை சம்பவம் இடம்பெற்றுள்ளது. தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் பஸ்வண்டி, குருதுபிட்டி பகுதியில் வீதியிலிருந்து விலகி விபத்துக்குள்ளானது. காயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக இரட்டை பெரியகுளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.