பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வவுச்சர் மற்றும் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் ஜனவரி 3 ம் திகதியுடன் நிறைவு செய்யப்படவுள்ளன. அதற்கான நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளுமாறு கல்வி சேவைகள் ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். வலய மட்டத்தில் தற்போது பாடப்புத்தங்கள் விநியோகிக்கப்பட்டுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.