பிஜி தீவில் சூறாவளி தாக்கத்தினால் பாரிய பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சர்வதேவ விமான போக்குவரத்துக்களும் ரத்துச்செய்யப்பட்டுள்ளன. வீடுகள் பல முழுமையாக சேதமடைந்துள்ளன. மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளமையினால் மின்சாரம் மற்றும் தொடர்பாடல் இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. சூறாவளியினால் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு ஒருவர் காணாமல்போயுள்ளார். 2 ஆயிரத்து 500க்கும் அதிகமானோர் பாதுகாப்பு மத்திய நிலையங்களில் தங்கியுள்ளதாக பிஜி செய்திகள் தெரிவிக்கின்றன.