கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதிவாகும் கைது சம்பவங்கள் 30 வீதத்தால் குறைவடைந்துள்ளது. கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடத்தின் நிலைமை முன்னேற்றம் கண்டுள்ளதாக சுங்கத்திணைக்களத்தின் ஊடகப்பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
குற்றச்செயலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமை மற்றும் விமான பயணிகள் நடைமுறையிலுள்ள சட்டம் தொடர்பில் போதிய தெளிவை கொண்டுள்ளமை போன்றவையே கைதுகள் குறைவடைய பிரதான காரணிகளென சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.