யாழ் மாவட்டத்தில், ஆவா குழு உட்பட ஆறு வாள் வெட்டுக்குழுக்கள் செயற்படுவதாக மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் சட்டவிரோத மணல் அகழ்வு, வாள் வெட்டுகள், கொள்ளை ஆகிவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தில், இளம் வயதுடைய இளைஞர்களே வாள்வெட்டில் ஈடுபடுகின்றனரெனவும் 6 வாள்வெட்டுக் குழுக்கள் தம்மால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண மாவட்டச் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகேஷ் சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
புத்தாண்டுக்குள் அவர்கள் அனைவரையும் தம்மால் ஒழிக்க முடியுமெனவும் அதற்கான விசேட நடவடிக்கை தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சிரேஷ்ட பொலிஸ் அத்தியாட்சகர் மகேஷ் சேனாரட்ன மேலும் தெரிவித்துள்ளார்.