யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் ஒருதொகை பீடி இலைகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். யாழ் விசேட அதிரடிப்படையினர் சுற்றிவளைப்பை முன்னெடுத்தனர். வெட் வரி செலுத்தாமல் எடுத்துவரப்பட்ட இவ்வாறான 43 கிலோகிராமுக்கும் அதிக எடைகொண்ட பீடி இலைகள் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.