அதிக மழை காரணமாக 65 ஆயிர்ததிற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கென 167 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
நிவாரண நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. அதற்கமைய மக்களை மீள குடியமர்த்த துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.