இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று காண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். குறித்த பகுதிகளின் நிலை தொடர்பில் நேரடியாக அறிந்து கொண்டதன் பின்னர் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் நோக்கில் அவரது விஜயம் அமைந்திருந்தது.
இந்நிலையில் அனர்த்த நிவாரண சேவைகளுக்கென 170 இலட்சம் ரூபா நிதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடாகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தேவைக்கமைய மேலதிக நிதி உதவியை வழங்க திட்டமிப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.