பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபா சம்பள உயர்வு ஜனவரி மாதத்திற்குள் பெற்றுக்கொடுக்கப்படுமென அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார். அவர்களுக்கான சம்பள உயர்வை வழங்க தற்போதய இடைக்கால அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தேர்தலுக்கு முன் வழங்கிய வாக்குறுதியின் படி 2020 ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தியா அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களில் ஒன்றான யாழ் கலாசார மத்திய மையத்தின் பணிகளை ஆராய்வதற்கென அமைச்சர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்தபோதே அவர் சம்பள அதிகரிப்பு தொடர்பான கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.