சட்டம் ஒழுங்கை தொடர்ந்தும் பாதுகாக்கும் நோக்கில் நாட்டின் சகல மாவட்டங்களிலும் ஆயுதமேந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்தும் உத்தரவை நீடிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாப்ய ராஜபக்ஷவின் கையெழுத்துடன் குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் பிறப்பிக்கப்பட்ட அவசரகால சட்டத்தை நீக்கியதன் பின்னர் பொதுமக்களின் பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் நாட்டினுள் அமைதியை காக்கும் பொருட்டு முப்படையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதற்கமைய பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் 25 நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் ஆயுதமேந்திய இராணுவத்தினரை கடமையில் ஈடுபடுத்துவதற்கு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.