தன்னை வெற்றிபெறச் செய்வதை விட தோல்வியடைய செய்வதற்கென ஐக்கிய தேசிய கட்சியில் ஒருசிலர் செயற்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். அகலவத்தை பகுதியில் இடம்பெற்ற கூட்டமொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி தேர்தல் பிரசார இறுதி காலப்பகுதியில் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டுமென ஐக்கிய தேசிய கட்சி தரப்பினர் சிலர் யோசனைகளை முன்வைத்தனர். அது தன்னை வெற்றிபெற செய்யப்பட்ட நடவடிக்கையா அல்லது தோல்வியடைய செய்ய மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையா என்பது தொடர்பில் தான் அறிந்திருக்கவில்லையெனவும் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.