அவுஸ்திரேலியாவில் தொடர்ந்தும் அதிக வெப்பமான காலநிலை நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கிழக்கு வலயத்தில் காட்டுத்தீ அதிகரித்துள்ளது. தீயை கட்டுப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். காட்டுத்தீ காரணமாக சுமார் 700 வீடுகள் அழிவடைந்துள்ளன. 1.2 மில்லியன் ஹெக்டேயர் நிலப்பரப்பும் அழிவடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதுவரை 8 உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையை கட்டுப்படுத்துவதில் அவுஸ்திரேலிய அரசாங்கம் செயற்பட்டு வரும் விதத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்து அந்நாட்டில் ஆர்ப்பாட்டங்களும் இடம்பெற்று வருகின்றன.
இதேவேளை அவுஸ்திரேலியாவில் அதிக வெப்பமான காலநிலை நிலவும் சந்தர்ப்பத்தில் ஹவாய் தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டமை குறித்து அந்நாட்டு பிரதமர் ஸ்கொட் மொரிசன் வருத்தம் தெரிவித்துள்ளார். தனது சுற்றுப்பயணத்தை ரத்துச்செய்து உடனடியாக நாடு திரும்பவுள்ளதாகவும் அவர் வாக்குறுதி வழங்கியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.