விளக்கமறியலில் வைக்கப்பட்டு சுவிசர்லாந்து தூதரக அதிகாரி கானியா பெனிஸ்டர், அங்கொட மன நல சுகாதார பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். பரிசோதனை ஒன்றை மேற்கொள்வதற்கென அவர் இன்று முற்பகல் அங்கு அழைத்துச் செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இதேவேளை கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் எனப்படும் சுவிசர்லாந்து தூதரக அதிகாரியை எதிர்வரும் 30 ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.