புதிய காணி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார். காணியற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்காக திட்டம் செயற்படுத்தப்படும். பிரதேச செயலக பிரிவுகளினூடாக தேவையான தகவல்கள் சேகரிக்கப்படுவதாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க குறிப்பிட்டார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகயோர் காணி வேலைத்திட்டம் தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளனர். உரிய காணிகள் தெரிவுசெய்யப்பட்டு ஊடகவியலாளர்களுக்கும் ஊனமுற்ற படைவீரர்களுக்கும் வழங்கப்படும். பாதுகாப்பு அமைச்சு மற்றும் ஊடகத்துறை அமைச்சுடன் இணைந்து பணிகள் மேற்கொள்ளப்படுமெனவும் காணி மற்றும் காணி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார்.