சிரியாவில் நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பொதுமக்கள் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வடமேற்கு சிரியாவில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சிரியா பாதுகாப்பு படையினரே தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆயுததாரிகளை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்ய படையினருக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கிலேயே சிரியா படையினர் விமான தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதேவேளை சிரியா – துருக்கி எல்லைப்பகுதியில் மோதல் உக்கிரமடைந்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக சிரியா தகவல்கள் தெரிவிக்கின்றன.