பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களின் பயன்பாட்டை நிறுத்த ஜனாதிபதி செயலகம் தீர்மானித்துள்ளது. அதை சுற்றாடல் அமைப்புக்கள் வரவேற்றுள்ளன. ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் கலந்துரையாடல்களில் பங்கேற்போருக்கு பிளாஸ்டிக் போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டது. எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிளாஸ்டிக் போத்தலில் குடிநீர் வழங்கப்படுவதை நிறுத்தியுள்ளார். பிளாஸ்டிக் போத்தல்களால் சூழல் மாசடைவதே இதற்கு காரணமாகும். கலந்துரையாடலில் பங்கேற்போருக்கு கண்ணாடி குவளையில் தண்ணீரை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.