பாடசாலை விடுமுறைக்காலத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விசேட ரயில் சேவை ஒன்று இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. கொழும்பு ற்கும் கண்டிக்கும் இடையில் இன்று முதல் பாடசாலை விடுமுறை முடியும் வரையில் இந்த ரயில் சேவை நாளாந்தம் இடம்பெறும் என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
காலை 9 மணிக்கு கொழும்பு கோட்டையில் இருந்து புறப்படும் இந்த ரயில் முற்பகல் 11:30 இற்கு கண்டியை சென்றடையும் என்று ரயில்வே திணைக்கள பிரதி பொது முகாமையாளர் காமினி செனிவிரத்ன தெரிவித்துள்ளார். இந்த ரயில் கம்பஹா மற்றும் பேராதனை ஆகிய ரயில் நிலையங்களில் மாத்திரம் நிறுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.