டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக தேசிய டெங்கு நோய் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை வட மாகாணத்தில் தற்போது டெங்கு நோயின் தாக்கம் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையுடன் கூடிய வானிலையை அடுத்து, டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. நவம்பர் மாதம் குறித்த அதிகரிப்பை காண முடிந்தது. அதேபோல் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழையை அடுத்து வடக்கு பகுதிகளிலும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது. நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வடக்கு, கிழக்கில் ஒவ்வொரு வருடமும் டெங்கு நோயின் தாக்கம் அதிகரிக்கும். எனவே இவ்வருடத்திலும் யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனை கட்டுப்படுத்துவதற்கு தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு, விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.